சனி, 27 ஜூலை, 2013

கல்லாய்ப்போனாய் - Others

கல்லாய்ப்போனாய் 
 

நீ பூஜைக்குச் 
செல்லத்தேவையில்லை 
அங்கு 
தெய்வத்தை காணவில்லை 

அர்ச்சனைக்குப் பறித்த 
மலர்களை 
உன் பாதத்தில் 
கொட்டிவிடுகிறேன் 
நீ 
கோவிலுக்குச் செல்லவேண்டாம் 

எத்தனை மாலைகளில் 
உன் 
முற்றத்து மாமரம் 
என்னைப் பார்த்து 
சிரித்திருக்கிறது 
நீ..ஏன் 
இன்னும் சிரிக்கவில்லை 

நீ.. 
கோவிலில் ஏன் 
கல்லாய்ப்போனாய்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக