கல்லாய்ப்போனாய்
நீ பூஜைக்குச்
செல்லத்தேவையில்லை
அங்கு
தெய்வத்தை காணவில்லை
*
அர்ச்சனைக்குப் பறித்த
மலர்களை
உன் பாதத்தில்
கொட்டிவிடுகிறேன்
நீ
கோவிலுக்குச் செல்லவேண்டாம்
*
எத்தனை மாலைகளில்
உன்
முற்றத்து மாமரம்
என்னைப் பார்த்து
சிரித்திருக்கிறது
நீ..ஏன்
இன்னும் சிரிக்கவில்லை
*
நீ..
கோவிலில் ஏன்
கல்லாய்ப்போனாய்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக