எப்போது
உன்..
காந்த விழிகளை பார்த்தபோதெல்லாம்
ஒரு காலத்தில்
நான்
எத்தனை கவிதைகளைத்தான் எழுதிவிட்டேன்
;*
நேற்று..
தற்செயலாய் நடந்த
ந்மது சந்திப்பில்
எனது
கற்பனைகளெல்லாம் வறண்டு
சில வினாடிகள்..
உன்னையே பார்த்துக்கொண்டு..
நான் மொளனமாகிக் கொண்டபோது
நீ
சிர்க்காமலே சென்றுவிட்டாய்
*
சிரிப்பு..
உனக்குமட்டுமா
வெளியில்..
எனக்கும்தான் எப்படிவரும்
ந்மது
விழிகளிலிருந்து
சுயநலக்காரர்கள்
என்றோ
தூக்கத்தை கலைத்துவிட்டபோது....
*
ரசியமாய் இருக்கட்டும்
எனக்கு இப்போதுதான்
உன்னைப்பார்த்து
சிரிக்கவேண்டும்போல்தான் இருக்கிறது
அதுதான்
எப்போது சிரிப்பது
எப்போது கவிதை எழுதுவது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக