திங்கள், 22 ஜூலை, 2013


எப்போது 

உன்.. 
காந்த விழிகளை பார்த்தபோதெல்லாம் 
ஒரு காலத்தில் 
நான் 
எத்தனை கவிதைகளைத்தான் எழுதிவிட்டேன் 
;* 
நேற்று.. 
தற்செயலாய் நடந்த 
ந்மது சந்திப்பில் 
எனது 
கற்பனைகளெல்லாம் வறண்டு 
சில வினாடிகள்.. 
உன்னையே பார்த்துக்கொண்டு.. 
நான் மொளனமாகிக் கொண்டபோது 
நீ 
சிர்க்காமலே சென்றுவிட்டாய் 

சிரிப்பு.. 
உனக்குமட்டுமா 
வெளியில்.. 
எனக்கும்தான் எப்படிவரும் 
ந்மது 
விழிகளிலிருந்து 
சுயநலக்காரர்கள் 
என்றோ 
தூக்கத்தை கலைத்துவிட்டபோது.... 

ரசியமாய் இருக்கட்டும் 
எனக்கு இப்போதுதான் 
உன்னைப்பார்த்து 

சிரிக்கவேண்டும்போல்தான் இருக்கிறது 
அதுதான் 
எப்போது சிரிப்பது 
எப்போது கவிதை எழுதுவது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக