நீ
மாலையிலே மலர்ந்தாய் நீ
மனதினிலே நிறந்தாய் நீ
சோலையிலே வளர்ந்தாய் நீ
சுகம்தருவாய் கவிவானீ
...***
பார்த்தவுடன் பறித்தள் நீ
பார்வையிலே கொண்றவள் நீ
சேதிஒன்று சொல்வாய் நீ
சேர்ந்திடவே அருள்வாய் நீ
****
காலையிலே கதிரவன் நீ
மாலையிலே மதிபோல் நீ
பாலையிலே நதிபோல் நீ
நலம் தருவாய் நவராணீ
**
ஆழ்கடலில் முத்தாய் நீ
ஆசைகொண்ட சொத்தாய் நீ
ஓசை இல்லா மொழிதான் நீ
பேசவந்த சிலைதான் நீ
*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக