திங்கள், 22 ஜூலை, 2013

இன்னும் என்ன  
 

உன்னை 
பார்த்துக்கொண்டே .. 
இருக்கலாம் 
ஒரு 
பகல் பொழுதின் 
ஆரம்பம்வரை 
-- 
உன்னை 
நினைத்துக்கொண்டே 
இருக்கலாம் 
என் 
நினைவுகள் 
உறங்கும்வரை 
--- 
நீ 
இல்லாமல் போனாலும் 
இருந்துவிட்டுப்போன இடம் 
இருப்பதாகவே இருக்கின்றதே 
இதை 
என்னவென்று சொல்வது... 
---- 
அன்னம் கூட 
தோற்றுப்போகும் 
உன் 
நடையைக்கண்டு 
நானோதோற்றுப்போனேன் 
உன் 
இடயைக்கண்டு 
--- 
வேலிக்குள் நின்று கொண்டு 
நீ...பார்ப்பதெல்லாம் 
வேடிக்கை அல்ல 
வேதனையைத்தான் 
அம்பு எய்தினால்கூட 
தாங்கிக்கொள்ளலாம் 
நீ 
எய்துவிட்டதோ 
அன்பை அல்லவா 
--- 
அன்புக்குரியவளே 
என் 
கனவில்தான் வந்தாய் 
நினைவெல்லாம் கொண்றாய் 
இன்னும் 
என்ன செய்வாயோ.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக