இன்னும் என்ன
உன்னை
பார்த்துக்கொண்டே ..
இருக்கலாம்
ஒரு
பகல் பொழுதின்
ஆரம்பம்வரை
--
உன்னை
நினைத்துக்கொண்டே
இருக்கலாம்
என்
நினைவுகள்
உறங்கும்வரை
---
நீ
இல்லாமல் போனாலும்
இருந்துவிட்டுப்போன இடம்
இருப்பதாகவே இருக்கின்றதே
இதை
என்னவென்று சொல்வது...
----
அன்னம் கூட
தோற்றுப்போகும்
உன்
நடையைக்கண்டு
நானோதோற்றுப்போனேன்
உன்
இடயைக்கண்டு
---
வேலிக்குள் நின்று கொண்டு
நீ...பார்ப்பதெல்லாம்
வேடிக்கை அல்ல
வேதனையைத்தான்
அம்பு எய்தினால்கூட
தாங்கிக்கொள்ளலாம்
நீ
எய்துவிட்டதோ
அன்பை அல்லவா
---
அன்புக்குரியவளே
என்
கனவில்தான் வந்தாய்
நினைவெல்லாம் கொண்றாய்
இன்னும்
என்ன செய்வாயோ.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக