சிறுகதைகள்





நுரைகள்

ஏதோ சிறைவாசம் போனமாதிரி ஜந்து வருடங்களை வெளிநாட்டில் தொலைத்துவிட்டு ஊர்வந்த என்னை அந்த சி ரி பி  பஸ் விட்டு விட்டு செல்கின்றது.

எப்படியாவது நாட்டுக்குப்போகவேண்டும்கடைசியாக விமானத்தில் ஏறி சீட்டில் அமரும்வரைஇருந்த அவா ஊரைக்கண்டதும் மேகக் கூட்டத்துள் தொலைந்த நிலவின் கதியாக...

சீ ரி பி விட்ட இடத்திலிருந்து ஒரு முக்கால் மைல் சென்றால்.. கடைசியாக வீட்டில்இருந்து வந்த கடிதத்தில்...”வீட்டு வேலைகள் எல்லாம் முடிந்து விட்டது நம்மடவீட்டைப்போல ஒரு வீடு நமது ஊரிலேயே கிடையாது... இப்படியாக  தங்கைதான்எழுதி இருந்தாள்இந்த வீட்டை அடைய நான் பல குறுக்குத்தெருக்களைசந்திக்கவேண்டீருக்கும்.

முதலில் நான் சந்திக்கும் நாலாம் குறுக்குத்தெரு எனது திசையில் முதலாம்குறுக்குத்தெருவாக கடந்து விடுகிறது .தெருவிற்கு பெயர்  போட்டவன் இங்கிருந்துஆரம்பித்திருந்தால் இதை முதலாம் குறுக்காக குறிப்பிட்டிருக்கக்கூடும். ..” 

அவன் அப்படி செய்யாமைக்கு சிலவேளை அவன் மனைவி…”.நம்மட வீட்டிலிருந்துமெயின் றோட்டுக்கு போவதற்கிடையில் முதலாவதாக வருகிற குறுக்குத்தெருவை முதலாம் குறுக்குத்தெரு என்று  போட்டால்தான் நான் நீங்க சொல்றமாதிரி...”இப்படிஏதாவது சரசம்கூட செய்திருப்பாள்.எது எப்படியோ நான் அவன் மனைவிக்கு எதிரானவன்அல்லது எதிர்கருத்துக்கொண்டவன் என்பது...தற்போதய முதலாம் குறுக்குத்தெருவுக்கு நான்மனதை பறிகொடுத்தவளின் பெயரைத்தான் போடவேண்டுமென நினைத்தேனோ அந்தவினாடியில்...நான் அவன் மனைவிக்கு எதிரிதான்...சும்மா போங்கள்.

  என்னைப்போல்  மனதை பறிகொடுத்தவர்கள் எல்லாம் நினைப்பார்களாயிருந்தால் பலபுள்ளிகளின் மனைவிகளை எதிர்க்கவேண்டிவரும்...பல புதிய பாதைகள் அமைக்கவேண்டிய அவசியம் ஏற்படும்...சில பாதைகள் சிலரின் வீட்டுக்குள்ளாலும் போகக்கூடும்...இன்னும் சற்றுசிந்தித்தால் ஊரே ஒரு வெளியாக இருக்கும்,அப்போது  மயானம்என்றுகூட பெயர் சூட்ட வேண்டிய அவசியம் ஏற்படலாம்.

 என்னைக் கண்டு..வாசல் கூட்டிக்கொண்டு நின்ற சுஸானா  வீட்டுக்குள் ஓடிச்சென்றதுஎனக்கு நன்றாகதெரிகின்றதுவீட்டுக்குள்....அவள் முதலில் தரிசிக்கும்,தன் கணவனிடமோஅல்லது தன் தாயிடமோ இந்நேரம் என்னைப்பற்றி சொல்லியிருப்பாள் எனக்கு...அவள்,முதலில் அவளது தங்கசியிடம் சொல்லவேண்டும் என்ற,ஒரு சின்ன ஆசை,எனதுவிருப்பங்களும் ஆசைகளும் தொண்ணூறுவீதம் நிறைவேறுவதில்லை என்பதற்கு சுஸானாஅவளது கணவனிடம் பேசிக்கொண்டிருப்பதே ஒரு சின்ன உதாரணம்.

 நிறைவேறாத கற்பனைகளுக்கு மன்னனாகிவிட்ட நான்,இன்னும் கிடுகு களையாவேலிகளை ஏதோ ரா ணுவ அணிவகுப்பை ஏற்றுக்கொளும்   தோரணையில் நடைகளை  எண்ணிக்கொண்டிருக்கின்றேன் ,பின்னால் ...எனது செண்ட் வாசனையில்மூக்குடைபட்டுப்போன சில சின்னஞ்சிறுசுகள் வலம்வந்துகொண்டிருக்கிறார்கள்.விஞ்ஞானிகள் சொல்வதுபோல் நான் ஆரம்பகால மனிதனாகஇருந்திருந்தால் ...”பிரயானக்களைப்பாக இருக்கிறது கொஞ்சம்வாலைத்தூக்கிக்கொண்டுவாருங்கள் இப்படி இந்த சிறுசுகளிடம் சொல்லியிருப்பேன்.

 ஊரில் இருந்தபோதே என்னக் கண்டு குரைத்து பழக்கப்பட்டுவிட்ட மர்ழியா வீட்டுநாய்,இப்போதும்கூட என்னைக் கண்டு பலமாக குரைத்துக்கொண்டு கேற்றுக்குள்மறைந்துகொள்வதில் எதுவித மாற்றமும் இல்லை என்னைக் காணாவிட்டால் அதற்குகுரைக்கக்கூட தெரிந்திருக்க மாட்டாது என்பதை புரிந்துதானோ என்னவோ அது நன்றிசொல்லும் பாவனையில் சில வேளை குரைத்துக்கொண்டு கேற்றுக்குள் மறைந்துவிடுவதும்உண்டு.சில வேளை ஓடிப்பழகும் ஆசையில்தானோ என்னவோ  அது என்னைத் துரத்த முயல்வதும் உண்டு,அது குரைக்க,நான் அடி..அடி...”என்று சொல்லிக்கொண்டு ஓடவேண்டும் இப்படி ஒரு ஆசை அதற்கு,எப்படியோ எனக்கு ஊரில்...எதிரிகள் இல்லாகுறைக்கு மர்ழியா வீட்டில் அதை நன்கு வளர்த்திருக்கிறார்கள்.

 அதோ கைக்கெட்டிய உயரத்தில்  சிவப்பாக ஒரு பெட்டிதெரிகின்றதே ,அந்தப் பெட்டிக்குள்..

எத்தனை சரித்திரங்கள்தான் ஒளித்திருக்கின்றன .ஒரு காலத்தில் சிவப்பு பெட்டிகளை கண்டாலே மாலை சூடவேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கின்றேன்.

 அதோ பெட்டிதான் எங்கள் கிராமத்தின் தபாலகம்,ஊருக்குள் தபாற்கந்தோர் திறக்கும் முடிவைக்கைவிட்டு விட்டு இப்படி அந்தக் சந்திக்கடையில் தபால் தபால் பகுதியினர் கொழுவி விட்டார்கள்.அதை முதன் முதலாகக் கொழுவியபோதுதான் எங்கள் ஊர் “எம் பி” க்குக் கூட ஒரு வரவேற்பும்,கழுத்தில் பூமாலைகளும் அந்த சந்தியில் காத்திருந்தனஅன்று பட்டாசு சத்தங்களுடன் கொழுவிவிட்டதுதான்,அடுத்த நாள் சந்திக்கடை முதலாளி அதை தரையில் இறக்கி வைத்துவிட்டார் .

 நாளடைவில் ...கடையில் தேனீர் குடிக்க வரும் வாடிக்கையாளர்களுக்கு ஓர் இருப்பிடமாகவும்,சில வேளை கரம் விளையாடுவதற்கோ,காட்ஸ் விளையாடுவதற்கோ உயரம் தெவைப்படும் போதும் ,இந்த தபால் தபால் பெட்டிதான் கைகொடுக்கும்.காலையில் கடை திறக்கும் நேரம் வரும் வரையும்,கடை திறக்காமல் போகும் நாட்களிலும்தான் அந்தப் பெட்டி உயரத்தில் இருக்கும்.மற்ற நேரங்களில் அந்தப் பெட்டியின் சேவை கடை முதளாளிக்கு அத்தியாவசியமாக ப் போய்விட்டதில் தபால் பகுதியினருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.

 “2 பி எம்” என கறுப்பு மையால் தபால் எடுக்கும் நேரத்தை அப்பெட்டியில் குறிப்பிட்டிருந்தபோதும்,அந்த நேரத்தில் கரம்,அல்லது காட்ஸ் விளையாட்டுக்கள் நடைபைபெற்றுக்கொண்டிருந்தால் தபால் எடுக்கவரும் காக்கிச்சட்டை விளையாட்டுக்கு :டிஸ்டொப்” பண்ணக்கூடாது என்ற கரிசனையில் அடுத்த நாளைய  “2 பி எம்” முக்கு வருவதும்,சில வேளை விளையாட்டு வீரர்களின் சிகரெட்டுகள் கூட காக்கிச் சட்டைக்கு  டாட்டா காட்டி விடுவதும் கேட்பார் இல்லாத ஒரு நடைமுறையாகி விட்டது.”இப்படி எல்லாம் நீங்கள் நடந்து கொள்வது தேசத் துரோகம்”…இப்படி விளையாட்டு வீரர்களிடம் சொல்வதற்கு நான் பல முறை முயற்சித்து, வீரர்களின் முறுக்கு மீசைக்குப்பயந்த சந்தர்ப்பங்களும் உண்டு.

என்னதான் ஊழல்கள் நடந்தாதாலும் எனக்கு அந்தப்பெட்டியைக் கண்டாலே போதும் ,அதிலும் ஜெஸிமா வின்  தம்பி அந்த கடைப்பக்கம் வந்தாலே…அவன் நேயர் விருப்பங்களுக்கு அனுப்பும் தபால் அட்டைகளைகூட எனக்குத்தான்  ஜெஸிமா …சொல்லியிருப்பாள் என்ற கற்பனையில் சூடான பிளேண்டிக்கு ஓடர் போட்ட நாட்கள்தான் எத்தனை.?

ஜெஸி..சினிமா நடிகைகள் தங்கள் பெயரை சுருக்கி விடுவது போல் நானும் ஜெஸிமாவிற்கு ஜெஸியாக சுருக்கி அவளுக்கு ஒரு புதிய பெயரை வைத்துவிட்டேன் .அவள் பெற்றோர்கள் என்மீது வழக்கு தொடுக்காவிட்டால் சரிதான்.

ஜெஸியுடன் அடிக்கடி நேரில் கதைத்துக்கொள்ள முடியாவிட்டாலும் இந்த  தபால் பெட்டியின் சேவை கடை முதலாளியைவிட எனக்குத்தான்  அவசியமாக இருந்தது.

சும்மாவா…ஒரு முறை …”உன்னைக் காணாத போதெல்லாம் எனக்கு ஒரு மாதிரியாக இருக்கு”…இப்படி நான் எழுதுவதற்கு நினைத்துகொண்டிருந்தபோதுதான்  முத ன் முதலாக ,அவள்..”உன்னை” என்ற இடத்தில் “உங்களை” என்று என்னைக் குறிப்பிட்டு ஒரு குறுகிய (ஆனால் எனக்கு பெரிய) கடிதம் அனுப்பியிருந்தாள்.அன்றுமுதல் ஆரம்பித்த தபால் சேவைக்கு வேறாக ஏதாவது கொடுக்கத்தான் வேண்டும்.அல்லது உலக காதலர்களின் நினைவாக முத்திரை வெளியிடும்படி ஆலோசனை சொல்ல வேண்டும்.

 நாளடைவில் எங்களுக்குள் கடிதங்களின்ல்தான் எதை எழுதுவது என்ற ஒரு வசனத்தட்டுப்பாடு ஏற்பட்டதின் பிரதிபலிப்பாய் வீட்டில் ஒரு திகதியில் “என்ன கறி” என்று கேட்டு எழுதும் அளவிற்கு கடிதங்களும் சிறுத்துப்போய்விட்டன,எப்படி இருந்தபோதும் “அந்தக்கடிதம் கிடைத்ததா?”என்றாவது ஒரு கடிதம் எழுதவேண்டும்போல் இருக்கும்.
 நாட்கள் கவலை இல்லாமல் ஓடிக்கொண்டேஇருந்தன,நான் எதிர்பார்க்கவே இல்லை…என் தங்கையின் கழுத்தில் தாலி ஏறுவதென்றால்  நிசாருக்கு சீதனமாக வீட்டுடன்  ஜம்பதினாயிரம் …எங்கு செல்வது?..கடலுக்கப்பால் செல்வதைவிட வேறு வழி  இருப்பதாகத்தெரியவில்லை .

வெளியே சென்று ஒருவருடத்தில் காரணமின்றி நிறுத்தப்பட்ட அவளது தொடர்புக்கும்,,நான் நித்திரை இன்றி தொலைத்த நாட்களுக்கும் ,என்றோ ஒரு நாள் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும்.

எனது அபிப்பிராயப்படி…இன்று நான் ஊர் வருவது ஜெஸிக்குத் தெரிந்திருந்தால் அவள் வீட்டு முற்றத்தால் செல்லும் அந்த முதலாம் குறுக்குத்தெருவே சிரித்துக்கொண்டிருக்கும்,ஆனால்…இன்னும் ஏன் அவள் என் மடல்களுக்குப் பதில் போடாமல் போனாள்? ஊரில் இருந்தவேளை வசனங்களுக்குத் தட்டுப்பாடாகிப்போன அந்த நாட்களை எண்ணிப்பார்க்கும்போது அவள் மேல் கொண்ட கோபங்கள் கூட எங்கோ ஓடி மறைந்துவிடும்

தங்கையின் கடிதத்தில் குறிப்பிட்ட புது வீட்டின் “ஹோலிங்” பெல்லை அழுத்திவிடுகின்றேன்.பின்னால் வந்த சின்னஞ்சிறுசுகள் எனது எனது சென்ற் வாசத்தை தொடர்ந்து சகித்துக்கொள்ளத் திரானியற்றுப் போய் எங்கோ ஒரு தெருவில் தொலந்திருக்கவேண்டும்.
வீட்டுக் கதவைத் திறப்பவர்கள் யாரா இருந்தாலும் முன்னறிவிப்பு இன்றி நிற்கும் என்னைக் கண்டு சில வினாடிகள் த்ங்கள் கண்களையே கசக்கப்போகிறார்கள்.
“ஒரு கடிதமாவது போட்டிருக்கக்கூடாதா?”…கோபத்துடன் மூஞ்சியை நீட்டிக்கொண்டாள் தங்கை.அவளுக்கு வந்த கோபத்திற்கு திறந்த கதவை மூடியிருக்கவேண்டும்.அவள் அப்படிச் செய்யாமைக்கு சிலவேளை நான் விமான  டிக்கெட் எடுக்க கஷ்டப்படவேண்டியிருக்கும் என நினைத்திருக்கவேண்டும்.மூஞ்சை நீட்டிக்கொண்டு  உம்மாவைக்கூப்பிட்டாள் .இனி..உம்மாவின் கோப மூஞ்சை தரிசிக்கவேண்டியதுதான்.

     ********
தொலைந்து போன ஜந்து வருடங்களை நினைக்கும்போது வேதனையாக இருந்த போதும் மீண்டும் விமானம் ஏறினால் என்ன என்று கேட்கும்படி….யாரை என் தங்கைக்கு மாப்பிள்ளையாக்க நினைத்தேனோ ..…அவன்…நிசார்… நான் நினைக்காத ஒன்றைச் செய்திருந்தான் .ஜம்பதினாயிரம் கேட்டவன் ஜந்து சதம் கூட வாங்காமல்…என்..ஜெஸியை…
“சரி …ஜெஸி  என்னை எப்படி என்னை மறந்தாள்?”
இப்படி பின்பொருபொழுதில் நண்பனிடம் கேட்டதில் …

“அதுவா..நீ யாரோ ஒருத்தியை முடிக்கத்தானே போகிறாய், அவளை முடித்து, அவளுடன் ..உன்னை மறந்துபோகும்போது எல்லாம் புரியும்,இப்போ உனக்கு எது சொன்னாலும் புரியாது ” என்றவனிடம்
”நான் எவளையும் முடிக்காவிட்டால் …?”

எனது அடுத்த வினாவிற்கு அவன் கூறிய “மடையா…” என்ற அந்த வார்த்தையிலேயே ஒரு காலத்தில் முதலாம் குறுக்குத்தெருவிற்கு அவளின் பெயரப் போடவேண்டும் என நினைத்தது எவ்வளவு தப்பாகிப்போய்விட்டது என்பதைப் புரிந்து கொண்டேன்.ஆனால் உலக காதலர்களின் நினைவாக ஒரு முத்திரை வெளியிடவேண்டும் என்று தபால் பகுதியினருக்கு ஆலோசனை கூறவேண்டும் என்பதில் எதுவித மாற்றமும் ஏற்படவில்லை.











விதியின் பாதையில்


வானொலியில் பொங்கும்பூம்புனல் போய்க்கொண்டிருக்கும் சுசான் கேற்றடியில்நின்றுகொண்டிருப்பான் ”காலை வெயிலில் நிறையவிட்டமின் “டி” இருக்கின்றது’ ஸ்கூலில் “ஹெல்த் மாஸ்டர் சொல்லியதை தன் மேனி இலேசாக சுடும்போது அவன் நினைத்துக்கொள்வான். இன்னும் ஒருபாடல் முடிவதக்குள் வந்துவிடுவாள் இப்படி அவன் நினைத்துக்கொண்டு சுவருக்கு ஒற்றைக்காலை உதை கொடுத்த வண்ணம் சாய்ந்து நிற்கும்போது-
அவள் சுஹைறா –“இண்டைக்கு ஸ்கூலுக்கு போவதில்லை” என்றமுடிவுடன் வீட்டில் முகம் கழுவாமலே நின்றிறுக்கக்கூடும்.
குறைந்தது எட்டுமணி வரை நின்றிருப்பான். ஏனென்றால் இவனைக் கடந்துதான் அவள் ஸ்கூலுக்கு செல்ல வேண்டும் என்ற நம்பிக்கையில், எத்தனை நாட்கள்தான் இவனது நம்பிக்கைகள் கைகூடாமல் விட்டிறுக்கின்றன. இருந்தும் இவன் அவளைத்தான் நம்பிக்கொண்டு –சிலவேளை நடைப்பிணமாகிவிடுவதும் உண்டு.


சென்றமுறை க பொ த உயர்தரப் பரிட்சைக்கு தோற்றியவர்களின் பட்டியலில் இவனும், இம்முறை தோற்ற இருப்பவர்களின் பட்டியலில் அவளும் இவ்வளவுதான் அவர்களுக்கிடையேயுள்ள இடைவெளி வித்தியாசம் எல்லாம்-

மற்றும்படி ஆரம்பக் கல்வி எல்லாம் இருவருக்கும் ஒரேஇடமாகஇயிருந்தபோதும் வயதில் மூத்தபடி இவன் முந்திக்கொண்டான்.
ஒரு நாள் –இவன் பத்தாம் வகுப்பில் இருக்கும்போது பாடசாலை வளவுள் நிறையமாங்காய்கள் காய்த்திருந்தன “களவில்மாங்காய் பறிப்பவர்களுக்கு கடும் தண்டனை விதிக்கப்படும்” அதிபரின் கடுமையான எச்சரிக்கைகளுக்கு பெயர்போனகாலமது.கேட்டுப்பறிப்பதைவிட களவில்பறிப்பதுதான்ருசி அதிகம் இப்படிமாணவர்களுக்கிடையே ஒரு அபிப்பிராயம்.ஏனென்றால் கேட்டால் தரவா போகிறார்கள் என்ற நம்பிக்கை.
அன்று மாலைநேர வகுப்புக்கு இவன் வழக்கத்தைவிட சற்று நேரத்தோடு வந்திருந்தான்.அதேஅன்று சுஹைறாவுக்கும் மாலைவகுப்பு.அவளும் இவனைப்போலத்தான் வருகைக்கு முந்தி.தனியே ஏதோ புத்தகத்தை புரட்டிக்கொண்டு வகுப்பறைக்குள் இருந்ததை இவன் கண்டிருக்கநியாயம் இல்லைதான்.
அவளைக்கண்டிருந்தால் அவளது வகுப்பறைக்குப் பக்கத்தில் காய்த்திருந்த மாமரத்தில் இவன் களவு செய்ய இடம்மிருந்திருக்காது. என்ன செய்யலாம்.
இவன் மரத்துக்குக் கீழ் கையை உயர்த அவள் சிரித்துவிட்டாள்.அந்த சிரிப்போடு ஒடுங்கி ஓடிப்போனவந்தான். நாளடைவில்-ஆண்களைக்கண்டால் பெண்களுக்கு ஏற்படும் நாணம்-அவனுக்கு அவளைக்கண்டால் ஏற்படும்.

இன்னும் ஒருநாள்-அது அவன் பாடசாலையை விட்டு விடைபெறும் கடைசிநாள்.விடைபெறும் மாணவர்களுக்கு விருந்தளித்து.கௌரவிக்க ஏனைய வகுப்பு மாணவர்கள் அக்கறையுடனும்,சுறுசுறுப்புடனும் ஒரு புப்றமிருக்க பிருந்துசெல்லும் மாணவர்கள், ஒருவருக்கொருவர் கட்டிஅணைத்தும்.கை கோர்த்தும்,சிரித்துக்கும்மாளமடித்துக்கொண்டும்,இன்னும் சிலர் அழுதுகொண்டும்........’
;இன்று நேரம் என்ன கெதியாகத்தான் ஓடுகிறது “சிலர்முணுமுணுத்துக் கொண்டர்கள்.
பாடசாலையின் முன்னேற்றம்பற்றி,அதற்காக மணவர்களின் ஒத்துழைப்பு பற்றி,விளையட்டுப்போட்டி என்றாலும் சரி,நாடகப்போட்டியென்றாலும் சரி,எதிலும் அக்கறையுடன் ஈடுபட்டு பாடசாலைக்கு ஒரு நல்ல பெயர் வாங்கிக்கொடுக்கமுடியுமோ அதுபற்றி – எதிர்காலத்தில் கல்வி வளர்சிபற்றி இப்படி எதுவெதுவெல்லாம் பேசி அதிபர் பேச்சை முடித்து கொள்ள பிரிந்து செல்ல்லும் மணவர்களின் பேச்சுக்கள், ஆடல்கள் பாடல்கள் இப்படி ஒவ்வொன்றாக மேடை ஏறிக்கொண்டிருந்தன.
மேடையில்- ஆணித்தரமாக பேசியவர்கள் ஒருபுறம் பேசமுடியாமல் வாயடைத்துப்போய் அழுதவர்கள் ஒருபுறம் மேடையில் வந்து சிரித்துவிட்டு இறன்கிக்கொண்டவர்கள் ஒருபுறம்-
பாடவந்த.சுசான் மட்டும் எதுவித சலனமும் இன்றி ”பசுமை நிறைந்த நினைவுகளேபாடித் திரிந்த பறவைகளே...பறந்துசெல்கின்றோம்”
அந்த சினிமாப்பாடலை பாடி முடித்தவனுக்கு அழுகையை அடக்க முடியாமல் தன்இருக்கைக்கு
வந்தவனை சுஹைறா இமைவெட்டாமல் பார்த்துக்கொண்டே இருந்தாள்.
எதிர்பாராமல்-அவர்களது பார்வைகள் சங்கமித்துக்கொள்ள அவளைக் கண்டால் அவனுக்கு ஏற்படும் அந்த நாணம் எங்கு சென்றதோ தெரியவில்லை.
சில வினாடிகள் பார்த்துக்கொண்டே இருந்தார்க்ள்,அங்கு-அவரவர் கைக்குட்டைகளுக்கு நிறைய வேலைஇருந்தது.
“ஏன் அப்படி அவள் என்னைப்பார்த்தாள் அந்தக்கேள்விக்கு விடைஇல்லாமலேநாட்கள் ஓடிக்கொண்டிருந்தன. அதுமட்டுமா “ஏன் அன்று பார்த்தவள் என்னைக்கண்டதும் இப்போதெல்லாம் தலைகுனிந்துவிடிகிறாள்” என்ற வினாவுக்குக்கூட விடை இன்றியே அவன் வீதியில் பொன்கும் பூம்புனலுக்கு காதுகொடுப்பான்
காலமாற்றம் மனித வாழ்வில்.எத்தனை மாற்றன்களைத்தான் ஏற்படுத்திவிடுகின்றது.வகுப்பில் இருந்த கெட்டித்தனம் பரீட்சையில் இன்றித்தோற்றுப்போனவன், குடும்பப் பொறுப்பை ஏற்க முடியாமல் பாயில்விழுந்த தந்தையை நினைத்துக் கண்ணீரானான்.
யா அல்லாஹ்....என்னை நம்பியே ஒரு தன்கை என்க்கு ஏதாவது வழிகாட்டு” அவனது பிரார்தனைக்கு அவன் மத்தியகிழக்கில்ரூம்போய்” ஆக வேண்டியதாயிற்று.
“நீங்க இந்தமருந்தைக்கொடுங்க எல்லாம்சரியாப்போய்விடும்.உங்களூகு முடியுமெயன்றால் உங்கட மகண்டபோன்நம்பரைத் தாருன்கள் நானே விபரமாக அவருக்கு எல்லாத்தையும் சொல்லிறன்..
“போன் நம்பரை எடுத்துக்கொண்டவளுக்கு பேசுவதற்கு ஒரு நல்ல தினத்தை எதிர்பார்த்துக்கொண்டிருந்த வேளையில்தான் அவள் எதிர்பாராமலே அவனிடமிருந்து போன் வந்தது .
வீட்டில் எல்லாவறையும் விபரமாகசொன்னார்கள் வாப்பாவின் வருத்தத்தய்ப் பற்றி தான்கள் எனக்கு அறிவிப்பதாக உம்மாவிடம் சொல்லியிருந்தும் சிலவேளை தன்களூக்குநேரமின்றிப்போனால்
....அதனால்தான் நான் பேசுகிறேன்
சில வினாடிகள் இவளுக்கு ஒன்றுமேபுரியவில்லை தன்னை ஒருவாறுசமாளித்துக்கொண்டு அவனுடன் பேசினாள் மீண்டும் நாளை நான்பேசுகிறேன் என்று அவன் மறுமுனையில் சொன்னபோது இவள் தன்னையே மறந்துபோனாள்..”பாவம் சுசான் பாடசாலையில் எவ்வளவோகெட்டிக்காறன், என பெயர் எடுத்தும் வாழ்க்கையில்...... கலன்கிய கண்களை கசக்கிக்கொண்டாள்.
எனக்கு ஏன்கண்கலங்குகின்றது.இப்போதுஎன்னநடந்துவிட்டது இதுதான் காதலோ புரியாதவளாய் தடுமாறினாள்.
அங்கு- சுசான் தனியே யோசிப்பதும் மகிழ்ச்சியாக இருப்பதும், நன்பர்களுக்கு பதில் சொல்லவேண்டியிருந்தது.
ஒரு காலத்தில் உங்களையே அடையவேண்டும் என்று நான் எனக்குள்ளேயே எவ்வளோவோ கற்பனைகளை வளர்த்தேன்.எனது எண்ணங்களும் கற்பனைகளும் நிச்சயமாக உங்களுக்கு தெரிந்துருக்க நியாயமில்லைதான்.
இருந்தும் தெரியாமல் போய்விட்டதே என்பதை நினைக்கும்போது நான் இப்போதும் கூட மிகவும் சந்தோசப்படுகிறேன். ஏன்தெரியுமா வாழ்க்கையைப் பற்றிபுரியாத அந்த வயதில் அந்த எண்ணம் எனக்கு மட்டுமல்ல எவருக்கும் ஏற்படுவது இயற்கைதான்.
ஒருவேளை எனது அந்த எண்ணங்களுக்கு தாங்கள் இடம்வைத்திருன்த்தால் சிலவேளை கண்ணீருடன்தான் வாழ வேண்டியநிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கலாம்.அதுவரையில் நான் மட்டுமல்ல தாங்களும் கொடுத்துவைத்தவர்தான்.
எது எப்படி இருந்தபோதும் நான் தங்களை மனதில் நினைத்துக்கொண்டதுபோல் தாங்களும் என்னை நினைத்துக்கொண்டுதான் எத்தனையோ நாட்களை மெளனமாக்கி விட்டிருக்கின்றீர்கள் என்பதை தங்களுடன் பேசியஒருசிலவினாடிகளுக்குள் தெரிந்துகொண்டேன்
முதலில் என்னை மன்னிக்கவேண்டும் ஏன் தெரியுமா வேலையின்றி வெளிநாட்டில் ”ரூம் போய்”யாக இருக்கும் ஒருவனுக்கும் பிறந்தமண்ணிலேயே பிரசித்தி பெற்று விளன்கும் ஒரு “டொக்டருக்கும் திருமணம் என்றால் இதை யார் ஏற்றுக்கொள்ளப்போகின்றார்கள்.
இந்த சமூகம்தான் சும்மா விட்டுவிடுமா இந்த சின்னவிடயத்தைக் கூட புரியாமல் ஏன் அப்படி ஒரு முடிவிக்கு வந்தீர்கள் என்பதுதான் எனக்குப்புரியவில்லை.
எதிர்பாராமல் அவனிடமிருந்து வந்த மடலை எத்தனைமுறை படித்திருப்பாளோ தெரியவில்லை நான் திருமணம் முடிப்பதாஇருந்தால் தங்களய்த்தான்” என்பதைமட்டும் உருக்கமாகஒரு பதிலாகஎழுதியிருந்தாள்.
இந்தப் பணம்இருக்கின்றதே எவனையாவது விலைக்குவாங்கிவிடலாம் என்பதற்கு ஆதாரமாய் கூடப்பிறந்த சகோதரன் இன்றீயே தாலியை சுமந்தாள் தங்கை.எது எப்படி இருந்தபோதும் தங்கைக்கு வாழ்வு கிடைத்துவிட்ட திருப்தியில் ஆனந்தக்கண்ணீரானான் சுசான்.
பதிலுக்குப் பதில் அவர்களிடையே ஒரு சில மடல்கள் பரிமாறிக்கொண்டன கடைசியில் .....”எல்லாத்திற்கும் மனம்தான் காரணம். கணவனுக்கு தொழில் இல்லைஎன்று எவர் சொன்னாலும் பரவையில்லை......
உங்களுக்குத்தெரியுமா இந்த உலகத்திற்கு பழிசொல்லத்தான் தெரியும் வழி சொல்லத்தெரியாது....அடுதத பதிலாவது எனக்கு ஒரு வழிசொல்லட்டும்” என முடித்த அவளது பதிலில் அவன் தோற்றுப்போனான்.
இன்னும் ஆறுமாதத்தால் நான் வந்துவிடுவேன் அதுவரைபொறுமை தேவை”என்ற பதிலைக்கண்டு மனம் பூரித்தாள் அவள்.
;எனக்கு இப்போதுதான் நிம்மதி ம்கிழ்ச்சி எல்லாம் வீட்டில் ஆரம்பத்தில் என் முடிவை வாப்பா கடுமையாக எதிர்த்தார்.
அந்த எதிர்ப்பு இரண்டு நாள் கூட நிலைக்கவில்லை கடைசியில்
வாப்பாசொன்னார்-
‘மகள் நமக்கு காணி,காரு,காசி,வங்களா,இப்படி எல்லா வசதியும்இருக்கு.அவர் நமது காணிகளைபார்த்துக்கொண்டாலேபோதும் ஏன் ஆறு மாதம் செல்லவேண்டும் உடன் வரச்சொல்லி ஒரு கோள் எடு மகள்...என்றார்.
ரூமில் தூங்கப்போனவனுக்கு தூக்கமேவரவில்லை ’ஊங்கள் விருப்பம் எப்படியோ அப்படியே’ என்று மட்டும் சொல்லிவிட்டுவரப்போகும் பொய்யான தந்திக்காக் காத்துக்கொண்டிருந்தான்சுசான்.
விதியாரைத்தான் விட்டது
தங்கைக்கு பிறக்ப்போகும் குழந்தையை நினைத்து விதவிதமான உடுப்புகள்,விளையாட்டுப் பொருட்கள்,இது....உம்மாவிற்கு...இது…..வாப்பாவிற்கு.....இது............த ங்கைக்கு இது....மச்சானுக்கு....இது...எத்தனையோ விலையுயர்ன்ந்த பொருட்களுடன் ரூமுக்கு வந்தவனை தந்தி ஒன்று காத்துக்கொண்டிருந்தது.
:உங்கள் தங்கையின் கணவருக்கு கடும் சீரியஸ் உடன் வரவும்”சுஹைறாதான் அனுப்பியிருந்தாள் மனதிக்குள் சிரித்துக்கொண்டவன் விமானத்தில் ஏறிக்கொண்டான்.
“பாவம்....தன்ரகுழந்தட முகத்தை பார்க்காமலே....எல்லாம் அந்த மோட்டார் சைக்கில்காரண்டபிழைதான் சைகில்லஏறினா பிளேன்லபோற நெனப்பு.....ஊரார் கதைத்துக்கொண்டார்கள்....மையத்தை அடக்க இவனுக்காக காத்துக்கொண்டிருபதையும் வழ்விழந்த தங்கைமயக்கமுற்றுக் கிடப்பதையும் இவனது வரவுக்காகவே...சிரிக்கவேண்டியவர்கள் வாடிப்போய் நிற்பதையும் அவன் அறிந்திருக்க நியாயமில்லைதான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக