செவ்வாய், 8 அக்டோபர், 2013


  
மரணம்
---------------

எண்ணி முடிப்பதற்குள்
நாட்கள்
வந்துதுவிடும்
சொல்லாமலே..பக்கத்தில்

நேரம் காட்டி
விசி யாக இருக்கும்
ஒரு
விடாடிகூட..
இரவல் தராமல்

இமைகள் கூட
இயங்க மறுக்கும்.
பக்கத்தில் இருப்பவர்கள்
இயக்கம் கொடுப்பார்கள்
மூடுவதற்கு

சொந்த பந்தங்கள்
நிலைகுலைந்து நிற்கும்
இவன் நிலைகண்டு.
நாளையும் எமக்கு
என்மதை
ஞாபகத்தில் வைத்துக்கொள்வார்கள்
இவனின்..புதைகுளிவரை

இல்லங்கள் பேசும்
சில மன்னிப்புகள் உயிர்பெறும்
சிலர்
காயங்களை சுரண்டிப்பார்ப்பார்கள்
ஆறாம் அறிவை தொலைத்தவர்களாக

மனிதர்களா
இவர்கள்
காயப்பட்ட நாய் கூட
கண்ணீர் சிந்தும்
ஒருநாள்போட்ட..பசிக்காய்
கதறியும் அழும்
ஏன்
உயிரையும் விடும்

நாட்கள் நகரும்
ஆண்டுகள் பிறக்கும்
நினைவுகள் நாழிதலோடும்..
நாவுகளோடும்
மட்டுப்படுத்தப்படும்
நான் என்று
வாழ்பவன்
நாம் என்று
வாழாதவரை.
வார்ப்பு