புதுக்கவிதைகள்





எனது பிரயானங்கள் 

அந்தப்பாதையில் 

வேண்டப்பாலன 

ஆயினும்... 

உனக்காகவே 

தினமும்.. 

அந்தப் பாதையை 

அளக்கின்றேன். 


உன் 

இதயப்படலை 

திறக்காமல் 

முற்றத்துப்படலை 

விரியத் 

திறந்துவிட்டதும் 

யார்...? 


மாலையில்... 

சந்திரோதயத்தை 

தரிசிக்கவரும் 

எனக்கு 

சூரியனின் 

அஸ்த்தமனத்தை 

ஏன் காட்டுகிறாய்.... 


என் 

இதயக்கோவிலின் 

வேள்வித்தீயாய்... 

நீ யானதும் 

ஏன்,,,,,? 


என் 

இஸ்ட தெய்வத்தை 

அர்ச்சிக்கவேண்டும் 

கோவிலுக்கு 

வந்துவிடு 


நீ 

என் 

கோவிலுக்குள் 

வந்துவிடு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக