சனி, 27 ஜூலை, 2013
கல்லாய்ப்போனாய்
நீ பூஜைக்குச்
செல்லத்தேவையில்லை
அங்கு
தெய்வத்தை காணவில்லை
*
அர்ச்சனைக்குப் பறித்த
மலர்களை
உன் பாதத்தில்
கொட்டிவிடுகிறேன்
நீ
கோவிலுக்குச் செல்லவேண்டாம்
*
எத்தனை மாலைகளில்
உன்
முற்றத்து மாமரம்
என்னைப் பார்த்து
சிரித்திருக்கிறது
நீ..ஏன்
இன்னும் சிரிக்கவில்லை
*
நீ..
கோவிலில் ஏன்
கல்லாய்ப்போனாய்.
திங்கள், 22 ஜூலை, 2013
இன்னும் என்ன
உன்னை
பார்த்துக்கொண்டே ..
இருக்கலாம்
ஒரு
பகல் பொழுதின்
ஆரம்பம்வரை
--
உன்னை
நினைத்துக்கொண்டே
இருக்கலாம்
என்
நினைவுகள்
உறங்கும்வரை
---
நீ
இல்லாமல் போனாலும்
இருந்துவிட்டுப்போன இடம்
இருப்பதாகவே இருக்கின்றதே
இதை
என்னவென்று சொல்வது...
----
அன்னம் கூட
தோற்றுப்போகும்
உன்
நடையைக்கண்டு
நானோதோற்றுப்போனேன்
உன்
இடயைக்கண்டு
---
வேலிக்குள் நின்று கொண்டு
நீ...பார்ப்பதெல்லாம்
வேடிக்கை அல்ல
வேதனையைத்தான்
அம்பு எய்தினால்கூட
தாங்கிக்கொள்ளலாம்
நீ
எய்துவிட்டதோ
அன்பை அல்லவா
---
அன்புக்குரியவளே
என்
கனவில்தான் வந்தாய்
நினைவெல்லாம் கொண்றாய்
இன்னும்
என்ன செய்வாயோ.
நீ பேசாதே
பட்டம் வேண்டும்.....
என்க்கு
ஒரு..
பட்டம் வேண்டும்
புலவனாக இல்லாவிட்டாலும்
ஒரு,,
பாவலனாகவாவது,,,
பட்டம்வேண்டும்.
$
நீ பேசாமல் போ
என் ,,,
பேனை பேசும்
அது போதும்
எனக்கு
ஒரு
பட்டம் வாங்க
$
நீ சிரிக்காமல் இரு
என்,,,
சிந்தனையாவது
சிறகடிக்கட்டும்
ஒரு
பட்டத்தையாவது நினைத்து
$
நீ,,,
பேசாமல் போன
நாட்களும்
சிரிக்காமல் விட்ட
விநாடிகளும்
பார்க்காமல் போன,,,
நொடிகளும்
சாட்சி சொல்லும்
என் பட்டத்தின்
ராணி
நீ தான் என்று
$
நீ,,
பேசாதே,,
பார்க்காதே
சிரிக்காதே
என்னை,,,,
ஒரு
பாவலனாக,,
பொன்னாடை,,,
போத்தும்வரை,,,
$
ஏன் என்றால்
உன்னை விட,,,
அந்த,,
நாட்களும்
வினாடிகளும்
நொடிகளும்
ஏதோ
பெறுமதியாய்,,,
மறக்கவே,,,முடியாமல்,,,,,,
ஒற்றூமைக் கீதம்
நாங்கள்
பூட்டில்லாவீட்டின்
சொந்தக்காரர்கள்
*
எங்கள்
வீட்டுக்கதவுகள்
தினமும்..
திருடர்களுக்காய்
” நல்வரவு” பாடும்
நிறைவேறா
எங்கள்
எதிர்பார்ப்புகளினிடையில்தான்
பசி...பசி...பசி...
வயிற்றுப்பசிக்காய்
நாங்கள்
கைநீட்டும்போது
அவர்கள்
கைபூட்டைக்கூட
உடைத்துவிடுகிறார்கள்
*
எங்களுக்குள்ளும்
ஒற்றுமைகீதம் இசைக்க
கவிஞர்கள்...
இருக்கிறார்கள்
.
ஓ...என் நண்பர்க்ளே
ஓ..என்
இனிய நண்பர்களே
உங்கள் எதிரிகள்
முத்தம் தருவதற்காய்
ஏவுகணைகளை..
நிரப்பிக்கொண்டிருக்கிறார்கள்
*
நீங்கள்
உங்கள்
அற்றுப்படுக்கைகளில்
நாணல்களை
வளர்த்துவிடுங்கள்
*
தோட்டத்துள்
மாடுகள் மேய்கிறதே
அவைகளை பிடியுங்கள்
கோரோசனைகளாவது
கிடைக்கலாம்
*
எதிர்காற்றுக்கு
கோரோசனைகள்
எரியாமலா
போய்விடும்
*
நீ
மாலையிலே மலர்ந்தாய் நீ
மனதினிலே நிறந்தாய் நீ
சோலையிலே வளர்ந்தாய் நீ
சுகம்தருவாய் கவிவானீ
...***
பார்த்தவுடன் பறித்தள் நீ
பார்வையிலே கொண்றவள் நீ
சேதிஒன்று சொல்வாய் நீ
சேர்ந்திடவே அருள்வாய் நீ
****
காலையிலே கதிரவன் நீ
மாலையிலே மதிபோல் நீ
பாலையிலே நதிபோல் நீ
நலம் தருவாய் நவராணீ
**
ஆழ்கடலில் முத்தாய் நீ
ஆசைகொண்ட சொத்தாய் நீ
ஓசை இல்லா மொழிதான் நீ
பேசவந்த சிலைதான் நீ
*
எப்போது
உன்..
காந்த விழிகளை பார்த்தபோதெல்லாம்
ஒரு காலத்தில்
நான்
எத்தனை கவிதைகளைத்தான் எழுதிவிட்டேன்
;*
நேற்று..
தற்செயலாய் நடந்த
ந்மது சந்திப்பில்
எனது
கற்பனைகளெல்லாம் வறண்டு
சில வினாடிகள்..
உன்னையே பார்த்துக்கொண்டு..
நான் மொளனமாகிக் கொண்டபோது
நீ
சிர்க்காமலே சென்றுவிட்டாய்
*
சிரிப்பு..
உனக்குமட்டுமா
வெளியில்..
எனக்கும்தான் எப்படிவரும்
ந்மது
விழிகளிலிருந்து
சுயநலக்காரர்கள்
என்றோ
தூக்கத்தை கலைத்துவிட்டபோது....
*
ரசியமாய் இருக்கட்டும்
எனக்கு இப்போதுதான்
உன்னைப்பார்த்து
சிரிக்கவேண்டும்போல்தான் இருக்கிறது
அதுதான்
எப்போது சிரிப்பது
எப்போது கவிதை எழுதுவது
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)